Sunday 19th of May 2024 09:41:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுகின்றன!

கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுகின்றன!


கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (நவ. 24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கோரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

“கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடை நடத்தும் வியாபாரி ஒருவருக்கு நேற்று காய்ச்சல் என்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

இதன் அடிப்படையில் சமூகத் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காரணமாகவே பாடசாலைகள் தொடர்பிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE